கும்பகோணத்தில் வெகு விமரிசையாக நடைபெற்ற திருக்கல்யாண வைபவம் : தருமபுரம் ஆதீனம் மற்றும் திரளான பக்தர்கள் பங்கேற்பு
Sep 10 2022 4:28PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கும்பகோணத்தில், முற்றிலும் கருங்கல்லால் ஆன பத்மாவதி தாயார் சமேத ஸ்ரீனிவாசப்பெருமாள் கோயிலில் திருக்கல்யாண வைபவம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
கும்பகோணம் ஸ்ரீநகர் காலனியில், பல கோடி ரூபாய் செலவில், புதுப்பொலிவுடன் முழுவதும் கருங்கல் திருப்பணியாக, இரட்டை ராஜகோபுரங்களுடன், சைவ மற்றும் வைணவ தலங்கள் இணைந்தார்போல், வலம்புரி விநாயகர், பர்வதவர்த்தினி சமேத ராமநாதசுவாமி கோயில், அனுக்கிரக ஆஞ்சநேயருடன் அமைந்துள்ள பத்மாவதி தாயார் சமேத ஸ்ரீனிவாசப்பெருமாள் கோயில் ஆகியவை இணைந்து அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் கோயிலில் 17 ஆண்டுகளுக்கு பிறகு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இதனைத்தொடர்ந்து ஸ்ரீபர்வத வர்த்தினி அம்பாள் உடனாகிய ராமநாதசுவாமிக்கும், பத்மாவதி சமேத ஸ்ரீநிவாச பெருமாளுக்கும் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. இதில் தருமபுரம் ஆதீனம் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.