ராசிபுரம் அருகே அத்தனூர் அம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்ற ஆயிரக்கணக்கான பக்தர்கள் : சேலம் - நாமக்கல் தேசிய நெடுந்சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
Sep 12 2022 4:40PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ராசிபுரம் அருகே, அத்தனூர் அம்மன் கோவில் கும்பாபிஷேகத்தில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துக்கொண்டதால் சேலம் - நாமக்கல் தேசிய நெடுந்சாலையில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகேயுள்ள அத்தனூர் அம்மன் கோவிலில் விநாயகர், விமானம், ராஜகோபுரம், அத்தனுார் அம்மன் மூலவர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு, சிவாச்சாரியார்களால் வேத மந்திரங்கள் முழங்க மகா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடந்தது. விநாயகர் விமானம், ராஜகோபுர கும்பாபிஷேகமும் மற்றும் அத்தாயி அம்மன், முனியப்ப சாமிகள், ஆதி மூலவர் பரிவார தெய்வங்கள் உள்ளிட்ட அனைத்து தெய்வங்களுக்கும் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில், அமைச்சர், மாநிலங்களவை உறுப்பினர், பாராளுமன்ற உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். இதனால், சேலம் - நாமக்கல் தேசிய நெடுந்சாலையில் ஏராளமான வாகனங்கள் நீண்ட வரிசையில் நின்றன. இதனால், சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.