சபரிமலை அய்யப்பன் கோவில் நடை இன்று மாலை திறப்பு
Sep 16 2022 10:08AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மலையாள மாதமான கன்னிமாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை இன்று மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. கோவில் தந்திரி கண்டரரு ராஜீவரு முன்னிலையில் மேல்சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி திறந்து வைக்கிறார். இன்று முதல் 21-ந் தேதி வரை பூஜைகள் 5 நாட்கள் நடைபெறும் என்றும், ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் பக்தர்கள் சாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.