திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய 75 ஆயிரத்து கிலோ தலைமுடி - 27 கோடியே 66 லட்சம் ரூபாய்க்கு ஏலம்
Sep 16 2022 11:40AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய 75 ஆயிரத்து 500 கிலோ தலைமுடி 27 கோடியே 66 லட்சம் ரூபாய்க்கு ஏலத்தில் விற்பனையானது.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாள்தோறும் குறைந்தபட்சம் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தலைமுடியை காணிக்கையாக செலுத்துகின்றனர். பக்தர்கள் ஏழுமலையானுக்கு சமர்ப்பிக்கும் தலைமுடியை அவற்றின் நீளம், நிறம் ஆகியவற்றின் அடிப்படையில் 6 வகைகளாக பிரித்து தேவஸ்தான நிர்வாகம் ஆன்லைன் மூலம் ஏலம் நடத்தி விற்பனை செய்கிறது. தலைமுடி விற்பனை மூலம் மட்டுமே தேவஸ்தானத்திற்கு ஒவ்வொரு ஆண்டும் சுமார் 200 கோடி ரூபாய் வரை வருமானம் கிடைக்கிறது. நேற்று நடைபெற்ற தலைமுடி ஏலத்தில் 75 ஆயிரத்து 500 கிலோ தலைமுடி 27 கோடியே 66 லட்சம் ரூபாய்க்கு ஏலத்தில் விற்பனை ஆனது.