புரட்டாசி மாத பிறப்பு மற்றும் வார விடுமுறை தினம் காரணமாக ராமேஸ்வரத்தில் குவிந்த பக்தர்கள் - நகருக்குள் கடும் போக்குவரத்து நெரிசல்
Sep 18 2022 5:52PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
புரட்டாசி மாத பிறப்பு மற்றும் வார விடுமுறை தினத்தை முன்னிட்டு ராமேஸ்வரத்தில் ஏராளமான வாகனங்களில் குவிந்த ஆயிரக்கணக்கான பக்தர்களால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இன்று புரட்டாசி மாத பிறப்பு மற்றும் வார விடுமுறை நாள் என்பதால் இதனை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் நேற்று இரவே வந்து குவிந்தனர். இந்த பக்தர்கள் அனைவரும் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலுக்கு எதிர்ப்புறம் உள்ள அக்னி தீர்த்த கடற்கரையில் புனித நீராடினர். அதனைத் தொடர்ந்து கோவில் வளாகத்தில் உள்ள 22 தீர்த்தங்களிலும் புனித நீராடிய பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ராமநாதசுவாமியை தரிசித்தனர். பக்தர்கள் கூட்டம் அலைமோதியதால் நான்கு ரத வீதிகளிலும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. அது மட்டுமின்றி தனுஷ்கோடிக்கு செல்லும் வழியிலும் ஏராளமான வாகனங்கள் அணிவகுத்தன.