சென்னையிலிருந்து திருப்பதிக்கு திருக்குடை ஊர்வலம் - திரளான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபாடு
Sep 21 2022 7:07AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சென்னையிலிருந்து திருப்பதிக்கு திருக்குடை ஊர்வலம் தொடங்கியது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.
திருப்பதி தேவஸ்தானத்தில் ஆண்டுதோறும் புரட்டாசி மாத பிரமோற்சவ விழா நடைபெறும். இதையொட்டி சென்னை அயனாவரத்தில் உள்ள திருப்பதி திருக்குடை சேவா சமிதி அறக்கட்டளை மற்றும் விஷ்வ இந்து பரிஷத் சார்பில், சென்னையில் இருந்து திருக்குடைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, பிரம்மோற்சவ விழாவில் சமர்ப்பிக்கப்படும். அதன்படி, திருக்குடைகளுக்கு, யானைகவுனி பைராகிமடம் திருவேங்கடமுடையான் வெங்கடேசப் பெருமாள் திருக்கோயிலில் இருந்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. இதைத்தொடர்ந்து, திருக்குடை ஊர்வலம் மேள தாளங்கள் முழங்க திருப்பதி நோக்கி புறப்பட்டது.
திருக்குடை ஊர்வலம் யானைக்கவுனி, லட்சுமிபுரம், ஆவடி, புத்தூர் வழியாக திருப்பதி திருமலையை வரும் 24-ம் தேதி சென்றடையும் என தெரிகிறது.