விருதுநகர்: சதுரகிரி மலை கோயிக்கு பக்தர்கள் செல்ல நாளை முதல் 13 நாட்களுக்கு அனுமதி
Sep 22 2022 2:32PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
புரட்டாசி மாத மஹாளய அமாவாசை மற்றும் நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு, சதுரகிரி மலை கோயிக்கு பக்தர்கள் செல்ல, நாளை முதல் 13 நாட்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு, மாதந்தோரும் பிரதோஷம், அமாவாசை, பௌர்ணமி நாட்கள் மட்டுமே பக்தர்கள் செல்ல அனுமதி வழங்கப்படுகிறது. இந்நிலையில் புரட்டாசி மாத பிரதோஷம், மஹாளய அமாவாசை மற்றும் நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு, நாளை முதல் அக்டோபர் 5 ஆம் தேதி வரை மொத்தம் 13 நாட்களுக்கு, பக்தர்கள் சதுரகிரி கோயிலுக்கு செல்ல, கோயில் நிர்வாகம், அனுமதி வழங்கி உள்ளது.