திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அக்டோபர் மாதம் அங்கப்பிரதட்சணம் செய்வதற்கான டிக்கெட்டுகள் முன்பதிவு - 5 நிமிடங்களிலேயே விற்றுத்தீர்ந்ததால் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஏமாற்றம்
Sep 22 2022 3:53PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அக்டோபர் மாதம் அங்கப்பிரதட்சணம் செய்வதற்கான டிக்கெட்டுகள் வெளியிடப்பட்ட 5 நிமிடங்களிலேயே முழுமையாக முன்பதிவு செய்யப்பட்டதால் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அக்டோபர் மாதத்தில் அங்கப்பிரதட்சணம் செய்வதற்கான ஆன்லைன் டிக்கெட்டுகள் இன்று கோயில் இணையதளத்தில் வெளியிடப்பட்டன. இவை வருடாந்திர பிரம்மோற்சவம் நடைபெறும் ஒன்று முதல் 5ம் தேதி வரையும், வெள்ளிக்கிழமைகள் தவிர்த்தும் பிற நாட்களில் அங்கப்பிரதட்சணம் செய்வதற்கான டிக்கெட்டுகளாகும். நாள் ஒன்றுக்கு ஆயிரத்து 500 டிக்கெட்கள் வீதம் வெளியிடப்பட்டன. காலை 9 மணிக்கு தொடங்கிய நிலையில் 5 நிமிடங்களில் அனைத்து டிக்கெட்களும் முன்பதிவு செய்யப்பட்டன. இதனால் அங்கப்பிரதட்சணம் செய்வதற்காக முன்பதிவு செய்ய முயன்ற பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.