கரூர் தான்தோன்றிமலையில் ஸ்ரீ கல்யாண வெங்கட்ரமண சுவாமி ஆலயத்தில் புரட்டாசி சனிக்கிழமையை ஒட்டி ஏராளமானோர் சுவாமி தரிசனம்
Sep 24 2022 12:08PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
புரட்டாசி பெருந்திருவிழாவை முன்னிட்டு கரூர் தான்தோன்றிமலையில் உள்ள ஸ்ரீ கல்யாண வெங்கட்ரமண சுவாமி கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.
புரட்டாசி மாதம் ஞாயிற்றுக்கிழமை தொடங்கிய நிலையில், இன்று முதல் சனிக்கிழமை என்பதால் ஆன்மீக பக்தர்கள் இன்று முதல் தங்களது விரதத்தை தொடங்கியுள்ளனர். தென் திருப்பதி என்று அழைக்கப்படும் கரூர் மாவட்டம், தான்தோன்றிமலை ஸ்ரீ கல்யாண வெங்கட்ரமண சுவாமி ஆலயத்தில் சுவாமி தரிசனம் செய்ய கரூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்தனர். கோவிந்தா, கோவிந்தா பக்தி முழக்கமிட்டபடி பெருமாளை தரிசித்தனர். தான்தோன்றிமலை ஸ்ரீ கல்யாண வெங்கட்ரமண ஸ்வாமி ஆலயத்தில் புரட்டாசி பெருந்திருவிழாவை முன்னிட்டு வருகிற 27 ஆம் தேதி கொடியேற்றமும், அதனைத் தொடர்ந்து அக்டோபர் 3ஆம் தேதி திருக்கல்யாணமும், அக்டோபர் 5-ம் தேதி திருத்தேர் பவனியும் நடைபெற உள்ளது.