ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே அமைந்துள்ள ஸ்ரீனிவாச பெருமாள்கோயில் பிரம்மோற்சவ விழா தொடங்கியது : அதிகாலை முதல் நீண்ட வரிசைகளில் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம்
Sep 24 2022 12:47PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
விருதுநகர் மாவட்டத்தில் தென்திருப்பதி என்று அழைக்கபடும் திருவண்ணாமலை ஸ்ரீனிவாச பெருமாள் கோயிலில் பிரம்மோற்சவ விழா தொடங்கியது.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் அருகே அமைந்துள்ள திருவண்ணாமலை ஸ்ரீனிவாச பெருமாள் கோயிலில் இன்று அதிகாலை சீனிவாச பெருமாளுக்கு 3 மணிக்கு திருமஞ்சனம் நடைபெற்றது. அதை தொடர்ந்து அதிகாலை 6 மணிக்கு காலசந்தி என்னும் சிறப்பு பூஜை நடத்தபட்டது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். ஆந்திர மாநிலம் திருப்பதி கோவிலுக்கு சென்று அங்கு காணிக்கைகளை வழங்க முடியாதவர்கள் இக்கோவிலுக்கு வந்து தரிசனம் செய்து ஆடு, மாடுகள், மற்றும் விளை பொருட்களை ஸ்ரீனிவாச பெருமாளுக்கு காணிக்கையாக வழங்குவார்கள். பிரம்மோற்சவ விழாவுக்கு மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வருவார்கள் என்பதால் மாவட்ட நிர்வாகம் சார்பில் சிறப்பு பேருந்து வசதிகள், மருத்துவ வசதிகள், குடிநீர் வசதிகள்,கழிப்பிட வசதிகள் செய்யப்பட்டுள்ளது. மேலும் பக்தர்கள் வருகை அதிகரிப்பால் 30 க்கும் மேற்பட்ட சிசிடிவிக்கள் மூலம் கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.