சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோயிலில் அதிகாலையில் நடை திறப்பு : ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வழிபட்டனர்
Sep 24 2022 12:51PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
புரட்டாசி மாதம் முதல் சனிக்கிழமையை முன்னிட்டு சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
புரட்டாசி மாதம் திருவோண நட்சத்திரத்தில் திருமலையில் பெருமாளின் அவதாரம் நிகழ்ந்ததாக கூறப்படுகிறது. சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள பார்த்தசாரதி பெருமாள் திருக்கோயிலில் அதிகாலையில் நடை திறக்கப்பட்டு பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் செய்யப்பட்டன. ஏராளமான பக்தர்கள் காலை முதலே நீண்ட வரிசையில் சாமி தரிசனம் செய்தனர். பெருமாளுக்கு வெண்ணிற பட்டுடுத்தி பூ அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் பெருமாளுக்கு துளசி மாலை அணிவித்து தீபமேற்றி வழிபாடு நடத்தி வருகின்றனர்.