புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையை ஒட்டி சென்னை தியாகராய நகரில் உள்ள திருப்பதி-திருமலை தேவஸ்தானத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
Sep 24 2022 12:56PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையை ஒட்டி தமிழகத்தில் உள்ள பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
சென்னையில் உள்ள பெருமாள் கோவில்களில் ஏராளமான பக்தர்கள் காலை முதலே தரிசனம் செய்து வருகின்றனர். சென்னை தியாகராய நகரில் உள்ள திருப்பதி - திருமலை தேவஸ்தானத்திற்கு சொந்தமான பெருமாள் கோவிலில் காலை 4 மணிக்கு சிறப்பு அபிசேகம், பூஜைகள் நடைபெற்றது. அதனை தொடர்ந்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் நீண்ட வரிசைகளில் நின்று பெருமாளை வழிபட்டு வருகின்றனர். நாராயணா.. கோவிந்தா.. என பக்தி முழக்கமிட்டு பெருமாளை வழிபட்டனர். பொதுமக்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் தடுப்புகள் அமைத்து வரிசையில் பொதுமக்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர்.