புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையை முன்னிட்டு திருவாளிமார்பன் கோவிலில் சிறப்பு வழிபாடு : பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம்
Sep 24 2022 1:09PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டம் திருப்பதிசாரம் திருவாளிமார்பன் கோவிலில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
திருப்பதிசாரம் திருவாளிமார்பன் கோவிலில் சிறப்பு பூஜைகளும் அபிஷேகங்களும் நடைபெற்றது. புரட்டாசி முதல் சனிக்கிழமையை முன்னிட்டு பக்தர்கள் ஏராளமானோர் கோவிலுக்கு வந்து வழிபட்டனர். கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டு வருகிறது.
இதே போன்று திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவில், பறக்கை மதுசூதன பெருமாள் கோவில் உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் உள்ள பெருமாள் கோவில்களிலும் சிறப்பு பூஜைகளும் வழிபாடுகளும் நடைபெற்று வருகின்றன.