புரட்டாசி முதல் சனிக்கிழமையை முன்னிட்டு திருப்பதி கோயிலில் பக்தர்கள் வழிபாடு : இலவச தரிசனத்திற்கு 16 மணி நேரம் காத்திருக்கும் பக்தர்கள்
Sep 24 2022 2:51PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையை முன்னிட்டு, திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் வழிபாடு நடத்தி வருகின்றனர். இலவச தரிசனத்திற்கு பக்தர்கள் 16 மணி நேரம் காத்திருக்கின்றனர்.
புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் பக்தர்கள் விரதமிருந்து ஏழுமலையானை வழிபடுவது வழக்கம். அந்த வகையில், புரட்டாசி மாதத்தின் முதலாவது சனிக்கிழமையை முன்னிட்டு, திருப்பதிக்கு அதிக அளவில் பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்ததை விட இந்த ஆண்டில் புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையில் பக்தர்கள் கூட்டம் குறைவாகவே காணப்படுகிறது.
இலவச தரிசனத்திற்கு 16 மணி நேரமும், 300 ரூபாய் கட்டண தரிசனத்திற்கு மூன்று மணி நேரமும் பக்தர்கள் வரிசையில் காத்திருக்கின்றனர். இதனிடையே, இலவச தரிசனத்தில் காத்திருந்த புதுக்கோட்டையைச் சேர்ந்த 28 வயதாகும் பாலசுப்பிரமணியம் என்பவருக்கு வலிப்பு ஏற்பட்டு, திருப்பதி மலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.