புகழ்பெற்ற குலசேகரப்பட்டின தசரா திருவிழா இன்று தொடக்கம் - விற்பனைக்காக குவிந்துள்ள தசரா வேட பொருட்கள்
Sep 26 2022 10:41AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது.
இந்தியாவில் மைசூருக்கு அடுத்தபடியாக தசரா திருவிழா, தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் வெகுவிமர்சையாக கொண்டாடப்படுகிறது. இங்குள்ள முத்தாரம்மன் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் தசரா விழாவில் பல லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பர். இந்தநிலையில், தசரா திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. இதையொட்டி, இன்று காளி பூஜையும் காப்பு கட்டும் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளன. விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் வரும் 5-ம் தேதி நடக்கிறது.
இதனிடையே, குலசேகரபட்டினம் முத்தாரம்மன் கோவில் திருவிழாயொட்டி நெல்லை டவுன் பகுதியில், தசரா வேட பொருட்கள் விற்பனைக்காக குவிந்துள்ளன.