கரூரில் தாந்தோன்றிமலை கல்யாண வெங்கட்ரமணர் கோவில் புரட்டாசி பெருவிழா - திரளான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர்
Oct 5 2022 1:48PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கரூரில் தாந்தோன்றிமலை கல்யாண வெங்கட்ரமணர் கோவில் புரட்டாசி பெருவிழாவில் திரளான பக்தர்கள்
கலந்து கொண்டு பக்தி முழக்கமிட்டபடி தேர் இழுத்தனர்.
கரூர் மாவட்டம் தான்தோன்றி மலையில் தானாக தோன்றிய தான் தோன்றி கல்யாண வெங்கட்ரமண சுவாமிகள் ஆலயம் தென்திருப்பதி என்று அழைக்கப்படுகிறது. சிறிய குன்றின் மீது அமைந்துள்ள இந்த ஆலயத்தில் புரட்டாசி பெருந்திருவிழா, கடந்த மாதம் 27-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. புரட்டாசி பெருநாளில் திருவிழாவின் முக்கிய அம்சமான திருத்தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது. திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து கோவிலை சுற்றி வந்தபோது கோவிந்தா... கோவிந்தா... என்று பக்தி முழக்கமிட்டனர். திருத்தேர் வருகையைட்டி திருக்கோவிலை சுற்றியுள்ள பகுதியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின் வினியோகம் நிறுத்தப்பட்டது.