திருப்பதி பிரம்மோற்சவத்தின் நிறைவாக சக்‍கரத்தாழ்வார் தீர்த்தவாரி - பல்லாயிரக்‍காணக்கானோர் புனித நீராடி வழிபாடு

Oct 5 2022 3:03PM
எழுத்தின் அளவு: அ + அ -

திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவத்தின் நிறைவாக இன்று, புஷ்கரணியில், சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடைபெற்றது. அப்போது பல்லாயிரக்‍கணக்‍கான பக்‍தர்கள் புனித நீராடி வழிபட்டனர்.

திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவம் இன்று நிறைவு பெறுகிறது. இதனையொட்டி இன்று காலை கோவில் திருக்குளமான புஷ்கரணியில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடைபெற்றது. முன்னதாக ஸ்ரீதேவி பூதேவி சமேத, மலையப்ப சுவாமி, சக்கரத்தாழ்வார் ஆகிய உற்சவர்கள் கோவிலில் இருந்து புறப்பட்டு முக மண்டபத்தை அடைந்தனர். அங்கு உற்சவர்களுக்கு சிறப்பு பூஜைகள், அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. தொடர்ந்து சக்கரத்தாழ்வாரை கோவில் திருக்குளத்துக்குள் எடுத்து சென்ற அர்ச்சகர்கள், மூன்று முறை நீரில் மூழ்க செய்து சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடத்தினர். திருக்குளத்தின் நான்கு புறங்களிலும் காத்திருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திருக்குளத்தில் மூழ்கி புனித நீராடினர். தொடர்ந்து உற்சவமூர்த்திகள் மாடவீதியில் வழியாக சென்று கோவிலை அடைந்தனர். ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவம் நிறைவடைய இன்று மாலை கொடி இறக்‍கம் நடைபெற உள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00