சென்னை மயிலாப்பூரில் சாய்பாபா கோயிலில் ஜீவசமாதி தினத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு : திரளான பக்தர்கள் பங்கேற்பு
Oct 5 2022 4:38PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சென்னை மயிலாப்பூரில் அமைந்துள்ள சாய்பாபா கோயிலில், ஜீவசமாதி தினத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
சாய்பாபாவின் 104-வது ஜீவசமாதி தினத்தை முன்னிட்டு, மயிலாப்பூரில் உள்ள சாய்பாபா கோயிலில், சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன. கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பாபா ஜீவசமாதி தினத்தில் பக்தர்கள் அனுமதிக்கப்படாத நிலையில், தற்போது பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வருகை தந்து வழிபாடு நடத்தினர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.