தூத்துக்குடி அருகே மேலூர் ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோயிலில் நடைபெற்ற தசரா திருவிழா - முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு
Oct 6 2022 11:49AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தூத்துக்குடி மாவட்டம் மேலூர் ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோயில் தசரா திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரத்தில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
தூத்துக்குடியில் கிராம தேவதை என்று அழைக்கப்படும் பழமை வாய்ந்த மேலூர் ஸ்ரீ அருள்மிகு பத்ரகாளியம்மன் கோயில் தசரா விழா, கடந்த 26ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் சிகர நிகழ்ச்சியாக சூரசம்ஹாரம் நேற்று நடைபெற்றது. சூரனை அம்மன் வதம் செய்யும் இந்த சூரசம்ஹார நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, சுவாமி தரிசனம் செய்தனர்.