கேரளாவில் பக்தர்களின் மாதாந்திர தரிசனத்திற்காக சபரிமலை ஐயப்ப சுவாமி கோயில் நடை திறப்பு - தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பம்பைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்
Nov 17 2022 12:02PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கேரளாவில் பக்தர்களின் மாதாந்திர தரிசனத்திற்காக சபரிமலை ஐயப்ப சுவாமி கோயில் நடை திறக்கப்பட்டது. விருச்சிக மாதத்தின் முதல் நாளில் கோவில் நடை திறக்கப்பட்டு பக்தர்கள் ஐயப்பனை தரிசிக்க அனுமதிக்கப்பட்டனர். பம்பை உள்ளிட்ட பகுதிகளில் நிலவும் தட்ப வெப்ப நிலை காரணமாக பக்தர்களை கட்டுப்பாட்டுடன் அனுமதிக்க திருவிதாங்கூர் தேவசம் போர்டு தீர்மானித்துள்ளது. மழை காரணமாக பம்பை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படலாம் என்பதால் அவ்வப்போது பகதர்களுக்கு எச்சரிக்கை விடுக்க சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.