சேலத்தில் கோவிலுக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட தங்கம் கணக்கீடு : உருக்கி பிரித்தெடுக்கப்பட்டு தங்க கட்டிகளாக மாற்றம்
Nov 18 2022 11:58AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சேலத்தில் பிரசித்தி பெற்ற சுகவனேஸ்வரர் கோவிலில், பக்தர்கள் உண்டியல் மற்றும் கோவிலுக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட தங்கங்களை ஓய்வு பெற்ற நீதிபதி துரைராஜூ தலைமையில் கணக்கிடும் பணி நடைபெற்று வருகிறது. கடந்த 2009-ம் ஆண்டிலிருந்து தற்போது வரை சுகவனேஸ்வரர் கோவிலுக்கு பக்தர்கள் உண்டியல் மற்றும் நன்கொடையாக வழங்கப்பட்ட 2 புள்ளி 700 கிலோ தங்கங்களை கணக்கிட்டு, அதனை முறையாக தமிழக இந்துசமய அறநிலைத்துறை அனுமதி பெற்று, மஹாராஷ்டிரா, மும்பையில் உள்ள மத்திய அரசின் தங்க உருக்காலைக்கு அனுப்பப்பட்டு, அதனை உருக்கி பிரித்தெடுக்கப்பட்டு, தங்க கட்டிகளாக மீண்டும் கோவில் நிர்வாகத்திற்கு கொண்டுவரப்பபட உள்ளது.