சபரிமலையில் இளம்பெண்களை அனுமதிக்க கேரள அரசு மீண்டும் முயற்சி - போலீசாருக்கு வழங்கியுள்ள கையேடு உறுதி செய்துள்ளதாக பா.ஜ.க. குற்றச்சாட்டு
Nov 18 2022 1:24PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சபரிமலை கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க கேரள அரசு மீண்டும் முயற்சித்து வருவதாக பா.ஜ.க. குற்றம்சாட்டியுள்ளது.
சபரிமலை தரிசனத்திற்கு இளம் பெண்களை அனுமதிக்கலாம் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு அரசு அதனை நடைமுறைப்படுத்தியது. இதையடுத்து கேரளாவில் பல இடங்களில் போராட்டம் வெடித்து வன்முறை ஏற்பட்டது. இதுதொடர்பான வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் 7 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வில் உள்ளது. இந்நிலையில் சபரிமலையில் போலீசாருக்கு வழங்கப்பட்டுள்ள கையேட்டில், சபரிமலைக்கு வரும் அனைவரையும் தரிசனத்திற்கு அனுமதிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக கொச்சியில் செய்தியாளர்களை சந்தித்த பா.ஜ.க. மாநில தலைவர் சுரேந்திரன், சபரிமலை தரிசனத்திற்கு இளம்பெண்களை அனுமதிக்க கேரள அரசு மீண்டும் முயற்சி செய்து வருவதாக குற்றம்சாட்டினார். சபரிமலை பாதுகாப்பு பணியில் உள்ள போலீசாருக்கு வழங்கப்பட்டுள்ள கையேடு இதனை உறுதி செய்துள்ளதாக தெரிவித்தார். இந்த செயலை வன்மையாக கண்டிப்பதாகவும், இதனை ஒரு போதும் அனுமதிக்க மாட்டோம் என்றும், அனைத்துவயது பெண்களையும் சபரிமலையில் அனுமதித்தால், கேரளாவில் மீண்டும் கலவரம் வெடிக்கும் என்றும் கூறினார்.