கார்த்திகை மாதப் பிறப்பையொட்டி திருவானைக்காவலில் சுவாமி-அம்பாள் வெளிப் பிரகாரங்களில் திருவீதி உலா வரும் வைபவம்
Nov 19 2022 12:07PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கார்த்திகை மாதப் பிறப்பையொட்டி திருவானைக்காவலில் சுவாமி அம்பாள் திருவீதி உலா நடைபெற்றது. பஞ்சபூத ஸ்தலங்களில் நீர் ஸ்தலமாக விளங்கும் திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் உடனுறை அகிலாண்டேஸ்வரி ஆலயத்தில், கார்த்திகை மாதப் பிறப்பையொட்டி, சந்திரசேகர சுவாமி மற்றும் அம்பாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, சுவாமி மற்றும் அம்பாள் வெளிப் பிரகாரங்களில் திருவீதி உலா வரும் வைபவம் நடைபெற்றதில் திரளான பக்தர்கள் வழிபாடு செய்தனர்.