திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் கோபுரங்களை சுத்தம் செய்யும் பணிகள் தீவிரம் - கார்த்திகை தீப திருவிழாவையொட்டி முன்னேற்பாடு பணிகள்
Nov 19 2022 12:12PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கார்த்திகை தீப திருவிழாவினையொட்டி அண்ணாமலையார் கோயில் கோபுரங்களை 54 மீட்டர் உயரம் கொண்ட உயர் நீட்டிப்பு ராட்சத ஏணிகளின் மூலம் சுத்தம் செய்யும் பணியில் தீயணைப்புப்படை வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். திருவண்ணாமலையில் ஆண்டு தோறும் நடைபெறும் கார்த்திகை தீப திருவிழா வரும் 27-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி டிசம்பர் 6-ம் தேதி அதிகாலை 4 மணிக்கு கோயில் கருவறையின் முன்பாக பரணி தீபமும், மாலை 6 மணிக்கு கோயிலின் பின்புறம் உள்ள 2,668 அடி உயரமுள்ள அண்ணாமலையார் மலையின் மீது மகாதீபமும் ஏற்றப்பட உள்ளது. இதற்கான முன்னேற்பாடுகள் அண்ணாமலையார் கோவிலில் நடைபெற்று வருகின்றது. பஞ்ச மூர்த்திகளின் வாகனங்கள், மகா ரத தேர்களை சீரமைக்கும் பணிகள், வாகனங்களுக்கு வண்ணம் தீட்டும் பணிகள், கோபுரங்களை சுத்தம் செய்யும் பணிகளில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.