தெற்குமலை ஸ்ரீ ஐயப்பன் திருக்கோயிலில் சிறப்பு அபிஷேகம் : திரளான ஐயப்ப பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம்
Nov 20 2022 3:44PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கார்த்திகை உத்திர நட்சத்திரத்தை முன்னிட்டு நெல்லை தென்கலம் தெற்கு மலை அருள்மிகு ஸ்ரீ ஐயப்பன் சுவாமி திருக்கோயிலில் நடைபெற்ற சிறப்பு அபிஷேக ஆராதனையில் திரளான ஐயப்ப பக்தர்கள் பங்கேற்றனர். ஸ்ரீ தர்ம சாஸ்தாவிற்கு மாப்பொடி, மஞ்சள் பொடி, வாசனை பொடி, பால், தயிர், இளநீர், விபூதி, சந்தனம் போன்ற பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து பக்தர்களால் கொண்டுவரப்பட்ட நெய் அபிஷேகம் செய்யப்பட்டது. நிறைவாக சிறப்பு அலங்காரத்தில் காட்சி தந்த ஸ்ரீ தர்மசாஸ்தாவிற்கு நட்சத்திர ஆர்த்தி கோபுர ஆரத்தி காண்பிக்கப்பட்டது. அப்போது ஐயப்ப பக்தர்கள் சரண கோஷங்களை முழங்கி பஜனை பாடல்கள் பாடினா்.