மதுரை மேலூரில் தேவாலயத்தின் முன்பிருந்த மாதா சொரூபத்தின் கண்ணாடி உடைப்பு : கிறிஸ்துவ மக்கள் முன்னனியினர் சார்பில் ஆர்ப்பாட்டம்
Nov 20 2022 5:43PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மதுரை மேலூரில் உள்ள கத்தோலிக்க தேவாலயத்தின் முன்பாக இருந்த வேளாங்கண்ணி மாதா சொரூபத்தின் கண்ணாடியை சமூக விரோதிகள் உடைத்ததை கண்டித்து கிறிஸ்துவ மக்கள் முன்னனியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சிவகங்கை சாலையில் உள்ள ஆலயத்தின் நுழைவாயிலில் அமைந்துள்ள வேளாங்கண்ணி மாதா சிலை அமைந்துள்ள பீடத்தின் கண்ணாடியை சில சமூக விரோதிகள் புதன்கிழமை நள்ளிரவில் உடைத்து விட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் காவல்துறையினர் விரைந்து நடவடிக்கை எடுத்து சமூக விரோதிகளை கைது செய்ய வலியுறுத்தி கிறிஸ்தவ மக்கள் முன்னணி அமைப்பைச் சேர்ந்தவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.