சிவகாசியில் உள்ள பத்ரகாளியம்மன் கோயில் ராஜகோபுரத்தில் திடீர் தீவிபத்து - திருமண ஊர்வலத்தின் போது வெடிக்கப்பட்ட பட்டாசால் விபத்து நிகழ்ந்ததாக தகவல்
Nov 21 2022 7:43AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் உள்ள பிரசித்திபெற்ற பத்திரகாளி அம்மன் கோயிலில், ராஜகோபுரத்தின் மீது பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. 50 ஆண்டுகள் பழமைவாய்ந்த இக்கோயிலில், கும்பாபிஷேகத்திற்காக புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், கோயில் வழியாக திருமண நிகழ்ச்சிக்கு சீர்வரிசைகளுடன் ஊர்வலமாகச் சென்றவர்கள் பட்டாசு வெடித்துள்ளனர். அப்போது ஏற்பட்ட தீப்பொறி, கோயில் ராஜ கோபுரத்தின் மீது போர்த்தப்பட்டிருந்த பிளாஸ்டிக் தார்பாயில் விழுந்து தீப்பற்றியுள்ளது. கண்இமைக்கும் நேரத்தில் தீ மளமளவென பரவி கொழுந்துவிட்டு எரிந்ததால் அப்பகுதியே புகைமண்டலமாக காட்சியளித்தது. தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், நீண்டநேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.