சபரிமலை ஐயப்பன் கோயிலில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்.. பிற்பகல் 3 மணிக்கே நடை திறந்து நள்ளிரவு வரை தரிசனம்
Nov 24 2022 1:30PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சபரிமலை ஐயப்பன் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.
இந்த ஆண்டுக்கான மகரவிளக்கு, மண்டல பூஜைக்காக கடந்த 16 ஆம் தேதி சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டது. கடந்த எட்டு நாட்களாக 3 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் சபரிமலைக்கு வந்துள்ளனர். நாளுக்கு நாள் பக்தர்கள் வருகை அதிகரித்து வரும் நிலையில், ஐயப்பன் கோவில் தரிசன நேரங்களை மாற்றி அமைக்கதேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. மாலை 4 மணிக்கு பதிலாக பிற்பகல் 3 மணிக்கே கோவில் நடையை திறந்து நள்ளிரவு வரை பக்தர்கள் ஐயப்பனை தரிசிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை தாம்பரத்தில் இருந்து டெல்டா மாவட்டங்கள் வழியாக சபரிமலை அருகே உள்ள புனலுர் வழியாக கொச்சி வரை சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.