திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா தொடக்கம் - நகரின் காவல் தெய்வமான துர்க்கை அம்மன் சிறப்பு அலங்காரத்தில் ஊர்வலம்
Nov 25 2022 9:55AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருவண்ணாமலை திருக்கார்த்திகை தீபத் திருவிழா நகரின் காவல் தெய்வமான துர்க்கை அம்மன் உற்சவத்துடன் விமரிசையாகத் தொடங்கியது. இதனையொட்டி துர்க்கை அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் அம்மன் மாட வீதியுலாவில் எழுந்தருளினார். திரளான பக்தர்கள் கலந்து கொண்டு துர்க்கை அம்மனை வழிபட்டனர். இன்று இரவு அண்ணாமலையார் கோயிலில் உள்ள பிடாரியம்மனின் மாட வீதியுலா நடைபெற உள்ள நிலையில் வரும் 27-ம் தேதி கார்த்திகை தீபத் திருவிழா கொடியேற்றம் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.