திருமலையில் பக்தர்கள் ஏழுமலையானுக்கு காணிக்கையாக செலுத்திய 21 ஆயிரத்து 100 கிலோ தலை முடி - 47 கோடியே 92 லட்சம் ரூபாய்க்கு ஆன்லைனில் விற்பனை
Nov 25 2022 9:54AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருப்பதி ஏழுமலையானுக்கு பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய தலை முடி, 48 கோடி ரூபாய்க்கு ஏலம் போனது. பக்தர்கள் காணிக்கையாக சமர்ப்பிக்கும் தலைமுடியை திருமலை திருப்பதி தேவஸ்தானம் ஆன்லைன் மூலம் ஏலம் நடத்தி விற்பனை செய்து வருகிறது. அந்த வகையில் நேற்று 21 ஆயிரத்து 100 கிலோ தலை முடி ஏலத்திற்கு விடப்பட்டது. இது 47 கோடியே 92 லட்ச ரூபாய்க்கு ஏலத்தில் விற்பனையாகியிருப்பதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.