சபரிமலை வரும் 30-ம் தேதி முதல் ஜனவரி 19-ம் தேதி வரை மகர விளக்‍கு புஜை : தமிழகத்திலிருந்து சிறப்பு ரயில்கள், பேருந்துகள்

Nov 26 2022 2:50PM
எழுத்தின் அளவு: அ + அ -

சபரிமலை மகர விளக்கு பூஜைக்காக தமிழகத்திலிருந்து சிறப்புப் பேருந்துகள், ரயில்கள் இயக்கப்படவுள்ளன.

சபரி மலையில் மண்டல பூஜை நடைபெற்று வரும் நிலையில், வரும் 30-ம் தேதி முதல் ஜனவரி 19-ம் தேதி வரை மகர விளக்‍கு புஜை நடைபெறவுள்ளது. இதனால், பக்தர்கள் வசதியை கருத்தில்கொண்டு சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு சிறப்புப் பேருந்துகள் மற்றும் ரயில்கள் இயக்கப்படுகின்றன. சென்னை - எர்ணாகுளம் இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. எர்ணாகுளம் சந்திப்பில் இருந்து, வாராந்திர சிறப்பு ரயில், நவம்பர் 28, டிசம்பர் 5, 12, 19, 26, ஜனவரி 2 ஆகிய தேதிகளில், மதியம் 1.10 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் நண்பகல் 12 மணிக்கு தாம்பரம் வந்துசேரும். இதேபோல, தாம்பரத்தில் இருந்து வாராந்திர சிறப்பு ரயில், நவம்பர் 29, டிசம்பர் 6, 13, 20, 27, ஜனவரி 3 ஆகிய தேதிகளில் பிற்பகல் 3.40 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் நண்பகல் 12 மணிக்கு எர்ணாகுளம் சந்திப்பை அடையும். இந்த ரயில் தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு விழுப்புரம், மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், ராஜபாளையம், தென்காசி, செங்கோட்டை, புனலூர், கொல்லம், செங்கனூர், கோட்டயம் வழியாக எர்ணாகுளத்தை சென்றடையும். இந்த சிறப்பு ரயிலுக்கான டிக்கெட் முன்பதிவு நேற்று தொடங்கியது. இதேபோல தமிழகத்திலிருந்து சபரிமலைக்கு சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00