கும்பகோணம் சுவாமிநாத சுவாமி ஆலயத்தில் கார்த்திகை திருவிழா தேரோட்டம் - திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்
Dec 6 2022 7:32PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கும்பகோணம் அருகில் உள்ள சுவாமிமலை சுவாமிநாத சுவாமி ஆலயத்தில் இன்று, திருக்கார்த்திகை திருவிழாவை முன்னிட்டு திருத்தேரோட்டம் நடைபெற்றது. முருக கடவுளின் அறுபடை வீடுகளில் நான்காம் படைவீடாகத் திகழும் சுவாமிமலை சுவாமிநாத சுவாமி ஆலயத்தில் திருக்கார்த்திகை திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் நடைபெற்றது. தேரில் சுப்பிரமணியர், வள்ளி தெய்வானை உடன் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரினை வடம் பிடித்து இழுத்தனர்.