பழனி மலைக்கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா : பக்தர்கள் வருகை அதிகரிப்பு - பாதுகாப்பு பணியில் கூடுதல் போலீசார்
Dec 6 2022 7:33PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
முருகனின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி முருகன் கோவிலில், கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளதால், மலை மீது செல்லக்கூடிய படிப்பாதை ஒரு வழிப்பாதையாக மாற்றப்பட்டுள்ளது. கார்த்திகை தீபத் திருவிழாவில் கலந்து கொள்வதற்காக ஏராளமான பக்தர்கள் பழனிக்கு வருகை தந்துள்ளதால் பாதுகாப்பு பணியில் கூடுதலாக போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மலை மீது கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டு சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி, இன்று மாலை நடைபெற உள்ளது.