விருதுநகர் சதுரகிரி கோயிலில் பவுர்ணமி வழிபாடு - அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலையேறி சாமி தரிசனம்
Dec 7 2022 1:58PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கார்த்திகை மாத பௌர்ணமி வழிபாட்டிற்காக சதுரகிரி மலைக் கோவிலுக்கு செல்ல 2வது நாளாக பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது, இரண்டு மாத தடை காலத்திற்குப் பின்னர், கோவிலுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கடல் மட்டத்திலிருந்து சுமார் 4 ஆயிரத்து 500 அடி உயரத்தில் அமைந்துள்ள இக்கோயிலில், மழைக் காலங்களில் பக்தர்களின் பாதுகாப்பு கருதி கோயிலுக்கு செல்ல வனத்துறை தடை விதிப்பது வழக்கம். கடந்த இரண்டு மாதங்களாக சதுரகிரி மலை கோயிலுக்கு செல்ல மழை காரணமாக வனத்துறை தடை விதித்ததால் பக்தர்கள் ஏமாற்றுடன் திரும்பிச் சென்றனர், இந்நிலையில் கார்த்திகை மாத பௌர்ணமி தினத்தை முன்னிட்டு நேற்று முதல் பக்தர்கள் மலையேறி சாமி தரிசனம் செய்ய வனத்துறை அனுமதி வழங்கியுள்ளது. இதனை அடுத்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் சதுரகிரி மலை ஏறி சுந்தர மகாலிங்கம் மற்றும் சந்தன மகாலிங்கத்தை தரிசனம் செய்து வருகின்றனர்.