மதுரை மீனாட்சி அம்மன் கோயில் உண்டியலில் ஒரு கோடியே 47 லட்ச ரூபாயை காணிக்கை செலுத்திய பக்தர்கள் - 465 கிராம் தங்கம், 890 கிராம் வெள்ளி, 497 அயல்நாட்டு நோட்டுக்கள் காணிக்கை
Jan 24 2023 3:00PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் உண்டியலில் ஒரு கோடியே 47 லட்ச ரூபாயை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளனர். கோயிலில் நடைபெற்ற எண்ணும் பணியில் துணை ஆணையர் அருணாச்சலம் முன்னிலையில் கோயில் ஊழியர்கள், வங்கி ஊழியர்கள் என 350-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இதில், ஒரு கோடியே 47 லட்சத்து 43 ஆயிரத்து 642 ரூபாய் ரொக்கப்பணம் மற்றும் 465 கிராம் தங்கமும், 890 கிராம் வெள்ளியும், 497 அயல்நாட்டு நோட்டுக்களும் காணிக்கையாக பெறப்பட்டுள்ளதாக திருக்கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.