திருமலையில் சுவாமி தரிசனம் செய்த ரிலையன்ஸ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி - திருப்பாவாட சேவையில் வருங்கால மனைவியுடன் கலந்து கொண்டு சிறப்பு வழிபாடு
Jan 27 2023 10:53AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பிரபல தொழில் அதிபர் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி திருமலையில் சுவாமி தரிசனம் செய்தார். ஏழுமலையான் கோயிலில் நடைபெற்ற திருப்பாவாட சேவையில் தனது வருங்கால மனைவி ராதிகாவுடன் ஆனந்த் அம்பானி கலந்து கொண்டு சிறப்பு வழிபாடு நடத்தினார். ஆனந்த் அம்பானி, ராதிகா மெர் சென்ட் திருமண நிச்சயதார்த்தம் சில நாட்களுக்கு முன் நடைபெற்றது. முன்னதாக திருமலைக்கு வருகை தந்த ஆனந்த அம்பானிக்கு, தேவஸ்தானம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.