கள்ளக்குறிச்சியில் துர்க்கை அம்மனுக்கு நடைபெற்ற 108 திருவிளக்கு பூஜையில் ஏராளமான சுமங்கலி பெண்கள் பங்கேற்பு - சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றது
Jan 28 2023 12:40PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கள்ளக்குறிச்சி ஸ்ரீ சிதம்பரேஸ்வரர் திருக்கோயிலில் தை மாதத்தின் இரண்டாவது வெள்ளிக்கிழமையை முன்னிட்டு 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இந்த திருவிளக்கு பூஜையையொட்டி திருவிளக்கினால் தூர்க்கை அம்மனை அலங்காரம் செய்து தூர்க்கை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றன. அதனை தொடர்ந்து திருவிளக்கு பூஜையில் 108 திருமந்திரம் சொல்ல, பெண்கள் குங்கும அர்ச்சனையுடன் விளக்கேற்றி தூர்கையம்மனை வழிபாடு செய்தனர். இதில் அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான சுமங்கலி பெண்கள் கலந்து கொண்டனர். திருவிளக்கு பூஜையை தொடர்ந்து பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.