ஜம்மு காஷ்மீரில் வைஷ்ணவி தேவி கோயிலுக்கு வரும் பக்தர்களின் பாதுகாப்புக்காக 700 சிசிடிவி கேமராக்கள் பொருத்தம் - யாத்ரா அட்டை விரைவில் அறிமுகம் செய்யப்படவுள்ளதாக கோயில் நிர்வாகம் தகவல்
Jan 28 2023 1:40PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஜம்மு காஷ்மீரில் அமைந்துள்ள வைஷ்ணவி தேவி கோயிலுக்கு வரும் பக்தர்களின் பாதுகாப்புக்காக, கோயில் வளாகம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் 700 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் கோயிலுக்கு வரும் பக்தர்களின் நடமாட்டத்தை கண்காணிக்கவும், கூட்டத்தை கட்டுப்படுத்தவும் யாத்ரா அட்டை விரைவில் அறிமுகம் செய்யப்படவுள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. பாதுகாப்பு வசதிக்காக ரேடியோ அதிர்வலை தொழில்நுட்பத்துடன் யாத்ரா அட்டை உருவாக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளது.