சீர்காழியில் பழமை வாய்ந்த புற்றடி மாரியம்மன் ஆலய தீமிதி திருவிழா : ஆயிரத்துக்‍கும் மேற்பட்டோர் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தி வழிபாடு

Jan 28 2023 2:14PM
எழுத்தின் அளவு: அ + அ -

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் பழமை வாய்ந்த புற்றடி மாரியம்மன் ஆலய தீமிதி திருவிழாவில், ஆயிரத்துக்‍கும் மேற்பட்டோர் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தி வழிபாடு செய்தனர். சீர்காழியில் உள்ள புற்றடி மாரியம்மன் ஆலயத்தில், இந்தாண்டு திருவிழா தை மாதம் முதல் வெள்ளி கிழமையான 20 ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. எட்டாம் நாள் விழாவான தீமிதி உற்சவம் வெள்ளியன்று இரவு நடைபெற்றது. தீமிதியை முன்னிட்டு ஆயிரத்துக்‍கும் மேற்பட்ட பக்தர்கள் கங்கணம் கட்டிக்கொண்டு ஊர்வலமாக கோவிலுக்‍கு வந்தனர். கோவிலுக்கு எதிரே அமைந்துள்ள பூக்குழிக்கு அம்மன் எழுந்தருளினார். அப்போது கோவில் கரகம் எடுத்தவர் பூக்குழியில் இறங்க அவரை தொடர்ந்து தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனர். பின்னர் புற்றடி மாரியம்மனுக்கு மகா தீபாராதனை நடைபெற்றது. இவ்விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு மாரியம்மனை வழிபட்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00