திருப்பதியில் ரதசப்தமியையொட்டி நடந்த வாகன புறப்பாடு : பக்தி கோஷங்கள் முழங்க உற்சவரை தரிசித்த பக்தர்கள்
Jan 28 2023 3:27PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருப்பதியில் ரதசப்தமியை முன்னிட்டு இன்று அதிகாலை, முதலாவது வாகன புறப்பாடாக ஏழுமலையானின் சூரிய பிரபை வாகன புறப்பாடு நடைபெற்றது. இதனை தொடர்ந்து இரண்டாவது வாகன புறப்பாடாக சின்னசேஷ வாகன புறப்பாடு காலை 9 மணிக்கு துவங்கி நடைபெற்றது. இதேபோல் மூன்றாவது வாகன புறப்பாடாக ஏழுமலையானின் கருட வாகன புறப்பாடும் நடந்தேறியது. கருட வாகன புறப்பாட்டையொட்டி உற்சவர் மலையப்ப சுவாமி, கோவிலில் இருந்து சர்வ அலங்கார ரூபியாக புறப்பட்டு வாகன மண்டபத்தை சென்றடைந்தார். வாகன மண்டபத்தில் கருட வாகனம் மீது எழுந்தருளிய உற்சவர் பக்தர்களுக்கு காட்சி தந்தார். பக்தி கோஷங்களுக்கு இடையே கோவில் மாட வீதிகளில் திரண்ட பக்தர்கள் அவரை தரிசித்தனர்.