அன்னை அஜ்மத் பீவி தர்ஹாவின் 82வது ஆண்டு சந்தனக்கூடு கந்தூரி விழா - மதச் சார்பற்று அனைத்து மதத்தினரும் திரளாக கலந்து கொண்டு வழிபாடு
Jan 30 2023 12:02PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே அன்னை அஜ்மத் பீவி தர்ஹாவின் 82வது ஆண்டு சந்தனக்கூடு கந்தூரி விழா நடைபெற்றது. மேலச்சாலை என்ற இடத்தில் அமைந்துள்ள இந்த தர்ஹா அப்பகுதி மக்களிடையே மிகவும் பிரசித்தி பெற்றதாகும். கடந்த 23ம் தேதி அங்கு கொடியேற்றத்துடன் கந்தூரி விழா தொடங்கியது. சிறப்பு பாத்தியாக்கள் ஓதப்பட்டு முக்கிய நிகழ்ச்சியான சந்தனக்கூடு வைபவம் அதிகாலை 4 மணிக்கு தொடங்கியது. இதற்காக சந்தனம் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு தர்ஹாவில் சந்தனம் பூசும் வைபவம் நடைபெற்றது. இதில் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆந்திரா, கேரளா உள்ளிட்ட பிற மாநிலங்களில் இருந்தும் மவுலானவின் கலிபாக்கல், சீடர்கள் பங்கேற்று வழிபாடு நடத்தினர். மதங்களை தாண்டி அனைத்து மதத்தினரும் இதில் திரளாக பங்கேற்றனர்.