திண்டுக்கல்: பாரம்பரியமிக்க வைரவேல் மற்றும் சர்க்கரை காவடிகளுடன் பழனிக்கு பாத யாத்திரை
Jan 31 2023 3:45PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு, காரைக்குடி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான முருக பக்தர்கள் பாரம்பரியமிக்க வைரவேல் மற்றும் சர்க்கரை காவடிகளுடன் பழனிக்கு பாத யாத்திரையாக திண்டுக்கல் வந்தனர். இதற்காக நத்தம் வாணியர் பஜனை மடத்தில் சிறப்பு யாக பூஜை நடைபெற்றது. இதையடுத்து, காவடி சிந்து பாடப்பட்டு, காவடி ஆட்டத்துடன் பக்தர்கள் பழனியை நோக்கி புறப்பட்டனர். அவர்கள் செல்லும் வழியில், வைரவேல் மற்றும் காவடிகளுக்கு பொதுமக்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.