காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் உண்டியலில் மழைநீர் புகுந்ததில் பல்லாயிரக்கணக்கான 500 மற்றும் 100 ரூபாய் நோட்டுகள் சேதம் - இந்து சமய அறநிலை துறை அதிகாரிகளின் அலட்சியத்தால் பக்தர்களின் காணிக்கை வீணானதாக சமூக ஆர்வலர்கள் வேதனை
Mar 7 2023 7:10AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
காஞ்சிபுரம் மாவட்டம் ஏகாம்பரநாதர் கோயில் உண்டியலில் மழைநீர் புகுந்ததில் பல்லாயிரக்கணக்கான 500 மற்றும் 100 ரூபாய் நோட்டுகள் நனைந்து சேதமடைந்துள்ளன. ஏகாம்பரநாதர் கோயிலில் 3 மாதங்களுக்கு பிறகு இந்து சமய அறநிலை துறை அதிகாரிகள் பத்துக்கும் மேற்பட்ட உண்டியல்களை திறந்து காணிக்கையை எண்ண தொடங்கினர். அதில் 3 உண்டியல்களில் மழை நீர் தேங்கியதால் பல்லாயிரக்கணக்கான 500 மற்றும் 100 ரூபாய் நோட்டுகள் நனைந்து நாசமானது தெரியவந்தது. பக்தர்கள் தங்கள் வேண்டுதலுக்காக கோயிலுக்கு வழங்கிய காணிக்கை இந்து சமய அறநிலை துறை அதிகாரிகளின் அலட்சியத்தால் வீணானதாக சமூக ஆர்வலர்கள் வேதனை அடைந்துள்ளனர்.