திருவண்ணாமலை இந்திரவனம் பச்சையம்மன் கோயிலில் மாசி பௌர்ணமி விழா - திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம்
Mar 7 2023 2:25PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அருகே இந்திரவனம் பச்சையம்மன் கோயிலில் மாசி பௌர்ணமி விழா விமர்சையாக நடைபெற்றது. சேத்துப்பட்டு அடுத்த இந்திரவனம் வனப்பகுதியில் அமைந்துள்ள பச்சையம்மன் கோயிலில் மாசி மாத பெளர்ணமியை முன்னிட்டு பச்சையம்மன் வாமுனி, செம்முனி, ஜடாமுனி, கரிமுனி உள்ளிட்ட சாமிகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. தொடர்ந்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்ட பச்சையம்மனின் வீதி உலா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு நேர்த்திக்கடனை செலுத்தி, சாமி தரிசனம் செய்தனர்.