ஆற்றுகால் பகவதி அம்மன் கோவிலில் நடைபெற்ற பொங்கல் திருவிழா - 25 லட்சத்திற்கும் மேற்பட்ட பெண்கள் பொங்கலிட்டு அம்மனை வழிபட்டனர்
Mar 7 2023 2:37PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கேரள மாநிலத்தில் பிரசித்திபெற்ற திருவனந்தபுரம் ஆற்றுகால் பகவதி அம்மன் கோவிலில் நடைபெற்ற விழாவில் 25 லட்சத்திற்கும் மேற்பட்ட பெண்கள் பொங்கலிட்டு வழிபட்டனர். மதுரையை எரித்த கண்ணகி குழந்தையாக கிள்ளியாற்றின் கரையில் அவதரித்த நாளான மாசி மாதம் பூரம் நட்சத்திரத்தில் ஆற்றுகால் பொங்கல் திருவிழா நடைபெறுகிறது. ஆண்டுதோறும் பல லட்சகணக்கான பெண்கள் விரதமிருந்து பொங்கலிட்டு அம்மனை வழிபடுகின்றனர். திருவனந்தபுரம் மாநகர பகுதிகளான தம்பானூர், மணக்காடு உட்பட நகரின் முக்கிய பகுதிகளில் பெண்கள் திரளாக திரண்டு சாலைகளிலும் வீட்டு வாசல்களிலும் பொங்கலிட்டு வழிபட்டனர்.