ஆற்காட்டில் வரதராஜ பெருமாள் கோயிலில் தெப்பத் தேர்திருவிழா - ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்து வழிபாடு
Mar 8 2023 2:57PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டில் வரதராஜ பெருமாள் கோயிலில் மாசி மாத தெப்ப தேர்திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. ஆண்டுதோறும் மாசி மாத தெப்ப தேர்திருவிழா நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், பெருமாளுக்கு தங்க ஆபரணங்களை கொண்டும், வண்ண மலர்களை கொண்டும் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து, அலங்கரிக்கப்பட்ட பெருமாளை பக்தர்கள் தோளில் சுமந்தபடி, தெப்பக்குளத் தேரில் வைக்கப்பட்டு பூஜைகள் செய்யப்பட்டது. இதில், கோவிந்தா என்ற கோஷம் முழங்க பக்தர்கள் ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.