திருச்சியில் குழுமாயி அம்மன் கோவில் குட்டிக்குடி திருவிழா : ஆயிரக்கணக்கான ஆடுகளை வெட்டி பக்தர்கள் நேர்த்திக்கடன்
Mar 9 2023 2:10PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருச்சியில் பிரசித்திபெற்ற குழுமாயி அம்மன் கோவில் குட்டிக்குடி திருவிழா வெகுவிமரிசையாக நடந்தது. புத்தூரில் உள்ள குழுமாயி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் மாசி மாதத்தில் குட்டிக்குடி திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு குட்டிக்குடி திருவிழா கடந்த பிப்ரவரி 24 ம்தேதி காப்புகட்டுதலையடுத்து, காளியாட்டத்துடன் வெகுவிமரிசையாக விழா தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான குட்டிக்குடித்தல் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்த திருவிழாவின்போது ஆயிரக்கணக்கான ஆடுகள் வெட்டப்பட்டு அவற்றின் ரத்தத்தை அம்மன் அருள்பெற்ற மருளாளி குடித்து, பின்னர் பக்தர்களுக்கு அருளாசி வழங்குவார். இதில் திருச்சி, புதுக்கோட்டை, பெரம்பலூர், அரியலூர், கரூர் உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.