திருவாரூர் ஸ்ரீதியாகராஜ சுவாமி ஆலய ஆழித்தேரோட்ட கொடியேற்ற நிகழ்ச்சி - கொடியேற்ற நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு
Mar 9 2023 2:46PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருவாரூர் தியாகராஜ சுவாமி ஆலயத்தில் பங்குனி உத்திர ஆழித்தேரோட்ட விழாவை முன்னிட்டு, கொடியேற்ற உற்சவம் விமரிசையாக நடைபெற்றது. கொடிமரத்தின் பீடத்தினை சுற்றியுள்ள ஸ்ரீவிநாயகர், ஸ்ரீசுப்பிரமணியர் உள்ளிட்ட சுவாமிகளுக்கு மஞ்சள், பால், சந்தனம் உள்ளிட்ட நறுமண பொருட்களால் அபிஷேகங்கள் நடைபெற்றன. தொடர்ந்து ரிஷபம் படம் வரையப்பட்ட கொடிக்கும், கொடிமரத்திற்கும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. பின்னர் வேதமந்திரங்கள் முழங்க, மேளதாள இசையுடன் 54 அடி உயரம் கொண்ட கொடிமரத்தில் ரிஷப கொடி ஏற்றப்பட்டது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான, ஸ்ரீதியாகராஜ சுவாமியின் ஆழித்தேரோட்டம் ஏப்ரல் 1ம் தேதி நடைபெறுகிறது.