வெள்ளாண்டிவலசு காளியம்மன் கோயிலில் தீமிதி திருவிழா - 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தகர்கள் தீ மிதித்து வழிபாடு
Mar 9 2023 3:33PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சேலம் மாவட்டம் எடப்பாடி வெள்ளாண்டிவலசு காளியம்மன் கோயிலில் தீமிதி திருவிழாவில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தீ மிதித்து வழிபாடு செய்தனர். எடப்பாடி நகராட்சிக்குட்பட்ட வெள்ளாண்டிவலசு காளியம்மன் கோயிலில் தீமிதி திருவிழா கடந்த வாரம் பூச்சாட்டுதளுடன் தொடங்கியது. அதனைத்தொடர்ந்து, விழாவின் முக்கிய நிகழ்வான தீமிதி திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தீ மிதித்து தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர். முதுகில் அலகு குத்திக்கொண்டு கார் மற்றும் ஜீப் உள்ளிட்ட வாகனங்களை இழுத்து பக்தர்கள் வழிபாடு செய்தனர்.