திண்டுக்கல் முன்னிலைகோட்டை ஸ்ரீ விநாயகர் உள்ளிட்ட திருக்கோயில் கும்பாபிஷேக விழா - வானில் வட்டமடித்த கருடனை கண்டு பரவசமடைந்த பக்தர்கள்
Mar 10 2023 2:50PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திண்டுக்கல் மாவட்டம் முன்னிலைகோட்டை ஸ்ரீ விநாயகர் உள்ளிட்ட திருக்கோயில் கும்பாபிஷேகத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். சின்னாளப்பட்டி அருகே புனரமைக்கப்பட்ட ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ காளியம்மன், ஸ்ரீ பகவதி அம்மன், ஸ்ரீ மந்தையம்மன், ஸ்ரீ நவகிரக கோயிலில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இவ்விழா இன்று நடைபெற்றது. நேற்று மாலை மங்கல இசை முழங்க மகா கணபதி பூஜை, வாஸ்து ஹோம பூஜை நடைபெற்றது. இரண்டாம் கால பூஜையாக கோபூஜை, மகா சாந்தி ஹோமங்கள் இன்று நடைபெற்றன. புண்ணிய நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீரை கோவிலை சுற்றி வலம் வந்து கோபுர கலசத்தில் ஊற்றினர். அப்போது கருட பகவான் வானில், வட்டமிட்டது பக்தர்களை பரவசத்தில் ஆழ்த்தியது.